மக்களை சந்திக்க வருகிறேன்; ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்திய சசிக்கலா!

புதன், 24 பிப்ரவரி 2021 (10:50 IST)
இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய சசிக்கலா விரைவில் மக்களை சந்திக்க வருவதாக கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சிறையிலிருந்து விடுதலையான பிறகு இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த சசிக்கலா இன்று ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்துள்ளார்.

அதை தொடர்ந்து பேசிய அவர் “ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டும். விரைவில் மக்களை சந்திக்க வருவேன்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்