சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சமீபத்தில் அவரின் உறவினர் டி.டிவி.தினகரன் நேரில் சந்தித்து பேசினார். அவருடன் சில அமைச்சர்களும் உடன் சென்றனர். ஆனால், வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் சசிகலாவை சந்திக்க சிறைத் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.