சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் டாஸ்மாக் கடை தீவைத்து எரிப்பு

திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (11:05 IST)
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக்கடை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டது.
 
மதுவுக்கு எதிராகப் போராடிய சசி பெருமாள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மதுவிலக்குப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், சசி பெருமாளின் குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்துள்ளனர். மதுவிலக்கை அமல் படுத்தினால்தான் உடலை வாக்குவோம் என்று கூறியுள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காந்தி சிலைக்கு அருகில்  சசி பெருமாளின் குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை என்ற ஊரில் செயல்பட்டு வந்த அரசு மதுபானக்கடை இன்று அதிகாலை மர்ம நபரால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
 
இதனால், அந்தக் கடையில் இருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்