சசி பெருமாள் இறப்புக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்: ராமதாஸ்

சனி, 1 ஆகஸ்ட் 2015 (10:42 IST)
மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்திவந்த, சசி பெருமாள் இறப்புக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் கூறியிருப்பதாவது:-
 
மது ஒழிப்புக்காக போராடி வந்த காந்தியவாதி சசி பெருமாள் மார்த்தாண்டம் அருகே மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
 
சசி பெருமாள் இறப்புக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். சசி பெருமாளின் மறைவு மதுஒழிப்பு போராட்டத்திற்கு பெரும் இழப்பாகும்.
 
அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
சி பெருமாளின் விருப்பப்படி தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்