பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: சரத்குமார்

ஞாயிறு, 3 மே 2015 (12:10 IST)
தற்போது ஏற்பட்டுள்ள பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு எம்.எல்.ஏ வான சரத்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 
 
பெட்ரோல் டீசல் விலை அவ்வப்போது உயர்த்தப்படுவதால் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனினும் இதுபோன்ற விலை உயர்வுகள் மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் விலை உயர்வு மட்டும் குறைந்தபாடில்லை. எனினும் இந்த தொடர்கதையை முன் வைத்து கட்சி தலைவர்கள் தங்கள் கண்டத்தை பதிவு செய்யவும் தவறுவதில்லை.
 
இந்த விலை உயர்வு குறித்து சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெட்ரோல் விலையை சில காசுகள் குறைப்பதும், பெரிய அளவில் உயர்த்துவதும் கண்டிக்கத்தது ஆகும். லாபத்தை ஈட்டும் நோக்கில் எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுகிறது. எனவே இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சரத்குமார் வலுயுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்