சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் சரண்யா ஹரி முதலிடம்

செவ்வாய், 10 மே 2016 (19:02 IST)
சிவில் சர்விஸ் தேர்வு முடிவில் தமிழகத்தில் சரண்யா ஹரி முதலிடம் பிடித்துள்ளார்.
 


 



மத்திய அரசு துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்காக கடந்த ஆண்டு சிவில் சர்விஸ் தேர்வு நடைப்பெற்றது. இதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், போன்ற பதிவிக்கான  முதல் நிலைத் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் பிரதான தேர்வு எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
 
இந்தியா முழுவதும் 1078 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இந்தியளவில் டினா டாபி என்பவரும், தமிழகத்தில் சரண்யா ஹரி என்பவரும் முதலிடத்தைப் பிடித்தனர். சரண்யா ஹரி இந்திய அளவில் 7-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
 
மேலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம்மாதம் நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக்  செய்யவும்    

வெப்துனியாவைப் படிக்கவும்