மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற காவலர் டிராக்டர் ஏற்றி கொலை

ஞாயிறு, 20 ஜூலை 2014 (15:05 IST)
தக்கோலம் அருகே மணல் கொள்ளை தடுக்க முயன்ற தலைமை காவலர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் ஆற்றில் மணல் எடுக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களின் டிராக்டரைப் பிடிக்க தக்கோலம் காவல் நிலைய தலைமை காவலர் கனகராஜ் முயன்றார். அப்போது அவர் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடிவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்