முன்னாள் குடியரது தலைவர் அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பீகாரில் விவசாய கல்லூரிக்கு, அப்துல் கலாம் பெயரை சூட்டப் போவதாக அம்மாநில அரசு அறிவித்தது.
மேலும், அப்துல் கலாம் பெயரில், அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலுக்கு பாடுபட்ட இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.