கள்ளக்காதலனோடு காட்டுக்கு சென்ற பெண் – 6 பேர் கொண்ட கும்பல் செய்த அத்துமீறல் !

புதன், 18 செப்டம்பர் 2019 (08:25 IST)
சேலம் மாவட்டத்தில் உள்ள  திருமணமானப் பெண் ஒருவர் தனது காதலனுடன் காட்டுப்பகுதிக்கு சென்ற போது அவர்களை தாக்கி அந்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னமநாயக்கம் பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரு தனியார் ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு  ஏற்கனவே திருமணமாகி இருந்த போதும் தன்னுடன் ஆலையில் வேலைபார்க்கும் தினேஷ் வயது குறந்த இளைஞருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதையடுத்து அடிக்கடி வெளியே செல்லும் பழக்கம் உள்ள இருவரும் சில நாட்களுக்கு முன்னர் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது அந்த பகுதியில் இருந்த 6 இளைஞர்கள் தினேஷை அடித்து விரட்டி விட்டுள்ளது. தினேஷ் விரட்டிய பின்னர் அந்தப் பெண்ணை மட்டும் அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்று கூட்டு வல்லுறவு செய்ய முயன்றுள்ளனர். பயந்துபோன  தினேஷ் காட்டுக்கு அருகில் உள்ள ஊருக்கு சென்று பொதுமக்களை அழைத்து வந்துள்ளார். மக்கள் கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த பெண்ணை விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

போலிஸில் அந்த பெண் புகாரளிக்க கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்