லிப் டூ லிப் சாமியார்: குழந்தை வரம் கேட்டும் பெண்களுக்கு அதிர்ச்சி ட்ரீட்மெண்ட்

திங்கள், 6 மார்ச் 2017 (15:39 IST)
குழந்தை வரம் கேட்டு வரும் பெண்களுக்கு லிப் டூ லிப் மூலம் வரம் அளிக்கும் கோவை சாமியார்.


 

 
கோவை மாதம்பட்டி குப்பனூரில் உள்ள ஒரு சாமியார், குழந்தை வரம் கேட்டு வரும் பெண்களுக்கு லிப் டூ லிப் கொடுப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் அதிக அளவில் குழந்தை வரம் கேட்டு கோயில்களுக்கு செல்வது, சாமியாரிடம் செல்வது வழக்கமான நிகழ்வுதான்.
 
பெரும்பாலான சாமியார்கள் பரிகாரம், பூஜை என ஏதாவது கடைப்பிடிக்க சொல்வார்கள். ஆனால் இந்த சாமியார் வினோதமான முறையில் வரம் அளித்து வருகிறார்.
 
வாழைப்பழத்தை சாமிக்கு காணிக்கையாக படைப்பார்கள். அந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிடும் சாமியார் நன்றாக மென்று அதை வரம் கேட்கும் பெண்களுக்கு வாயோடு வாய் வைத்து ஊட்டி விடுகிறார். இதற்கு பெயர் கவாள சேவை என பெயரிட்டுள்ளனர். இந்த வரம் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறதாம். இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

வரம், சேவை, அறிவுரை என்ற பெயரில் சாமியார்களின் லீலை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் இதனை அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்