கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்த இ.ஆ.ப. அதிகாரி உ.சகாயம் தலைமையிலான குழுவை நியமித்துப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், தமிழக அரசுக்கு நீதிமன்றம் ரூ.10,000 அபராதமும் விதித்துள்ளது.