அப்போது, செய்தியாளர்களிடம் சுப.உதயகுமார் பேசுகையில், எனக்கு, தேமுதிக மற்றும் தலித் விரோத செயல்களை முன்னிலைப்படுத்தும் பாமகவின் ஆதரவு தேவையில்லை. மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள வைகோ, தொல். திருமாவளவன் ஆகியோர் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் அவர்களது ஆதரவை மட்டும் ஏற்பேன்.