அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த எஸ்.சந்துரு(36) என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ஜேசுராஜ் என்ற ஃபேஸ்புக் கணக்கில் முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் ஆண்டனி ஜேசுராஜ், முதல்வர் உடல்நிலை குறித்து பிரான்ஸ் தமிழச்சி எழுதிய அந்த பதிவை ஷேர் செய்து, அதுபற்றி மேலும் வதந்தி பரப்பும் விதமாக எழுதியுள்ளார்.