திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்

புதன், 11 மே 2016 (12:03 IST)
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.சி. பழனிச்சாமி மகன் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணத்தை தேர்தல் அதிகாரிகல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


 
திமுக சார்பில் கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி தொகுதியில் கே.சி. பழனிச்சாமி போட்டியிடுகிறார். கே.சி. பழனிச்சாமி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து.
 
இதனை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கே.சி.பழனிச்சாமியின் மகன் சிவராமன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ. 1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
 
இது குறித்து கூறியுள்ள தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, கே.சி.பழனிச்சாமியின் வீடு உள்ளிட்ட இடங்களில் மேற்கொண்ட சோதனையில் 2 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்