சென்னையில் உள்ள ஜெ.ஜெ.நகரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 2 இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் போல் வேடமிட்டு பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக அண்ணாநகர் காவல்துறை துணை ஆணையர் மனோகரனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அப்போது அந்த விடுதியிலுள்ள ஓர் அறையில் பணக்கட்டுகளின் மேல் வாலிபர் ஒருவர் உறங்கி கிடந்துள்ளார். அவரிடம் தொடர் விசாரணை நடத்தியதில் அவர், கொடுங்கையூரை சேர்ந்தவர் என்பதும், அவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் தொடர் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் இவர்கள், தாங்கள் கொள்ளையடித்த பணத்தில், இளம்பெண்களை தங்களது வலையில் விழவைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.