கரூர் அருகே சுக்காலியூர் பகுதியை அடுத்த வதியம் பள்ளம் பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் யாரோ கதவின் முன்புறம் உள்ள கிரில் கம்பியை உடைத்தும், ஷட்டர் கதவினை உடைத்தும் உள்ளே புகுந்தனர்.
கடையில் இருந்த குவார்ட்டர் பாட்டில்கள் 1055, ஆப் எனப்படும் அரை பாட்டில்கள் 218 பாட்டில்கள், புல் என்ற முழு பாட்டில்கள் 7 மற்றும் பீர் 7 பாட்டில்களையும் அள்ளிச் சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 330 ஆகும்.