பண்ருட்டி அருகே தரைப்பாலம் உடைந்தது: 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

ஞாயிறு, 13 டிசம்பர் 2015 (06:02 IST)
பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் தரைப்பாலம் திடீரென உடைந்ததால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.
 

 
கடலூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கடும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கெடிலம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில், தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் 12 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்கு அப்பகுதி கிராம மக்கள் தள்ளப்பட்டனர்.
 
மேலும், இந்த ஆற்றைக் கடக்க முயன்ற கலியப்பெருமாள் என்பவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார் என்பது குறிப்பிடதக்கது.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்