திமுக தலைவர் கருணாநிதி மீது உரிமை மீறல் புகார்

வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (17:00 IST)
திமுக தலைவர் கருணாநிதி மீது அவை உரிமை மீறல் புகார் குறித்து ஆய்வு செய்யுமாறு உரிமை மீறல் குழுவுக்குப் பரிந்துரைப்பதாக சபநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 25ம் தேதி நடந்த வேளாண்துறை தொடர்பான மானியக்கோரிக்கை நடைபெற்றது. இதில் சட்டப்பேரவையில் பேசாத சில விஷயங்களைப் பேசியதாக கூறி  திமுக தலைவர் கருணாநிதி தனது முரசொலி நாளிதழில் எழுதியிருக்கிறார். அவர் மீது அவை உரிமை மீறல் கொண்டுவர வேண்டுமெனக்கோரி வேளாண் துறை அமைச்சர் வைத்திலிங்கம் மனு அளித்துள்ளார். இதனையடுத்து சபநாயகர் தனபால், உரிமை மீறல் புகார் மேலோட்டமாக இருப்பதாகவும், அதுபற்றி உரிய ஆய்வு செய்யுமாறும் கூறி, உரிமை மீறல் குழுவுக்குப் பரிந்துரைப்பதாக அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்