ஈரோடு வனமண்டலத்திற்கு உட்பட்டது அந்தியூர், பர்கூர், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கடம்பூர் வனப் பகுதி. இந்த வனப் பகுதியில் புலி, சிறுத்தை, கழுதை புலி, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகிறன.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வங்ககடலில் ஏற்பட்ட புயல் காரணமாகப் பெய்த தொடர்மழையால் வனப் பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பியது. மேலும் வன ஓடைகளில் தொடர்ந்து தண்ணீர் ஓடிக்கொண்டுள்ளது. இதனால் இந்த வனப் பகுதி வளமாகக் காணப்படுகிறது.