தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் சேலம் மாவட்டத்தில் உள்ள செங்கலணை தெருவில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மற்றும் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் உள்ள திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குசாவடியகளில் மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.