இனிமேல் சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு

வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:19 IST)
இனிமேல் சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
சார் பதிவாளர் அலுவலகங்கள் தற்போது சனி ஞாயிறு விடுமுறை ஆக இருந்து வரும் நிலையில் பொதுமக்களின் வசதிக்காக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
மேலும் விடுமுறை நாளன்று பத்திரப்பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
இந்த அறிவிப்பு பத்திர பதிவு செய்யும்போது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்