சுதந்திர போராட்ட வீரர், வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, தமிழக தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு தகவல் கேட்டுள்ளேன். பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய தயராக உள்ளது.
பீகார் மாநில அரசியல் என்பது வேறு. தமிழகத்தில் உள்ள அரசியல் நிலவரம் என்பது வேறு. எனவே, பீகார் தேர்தலுன் தமிழகத்தை ஒப்பிட்ட முடியாது. ஆனாலும், அந்த மாநிலத்தில் 1.5 கோடி வாக்குகளை பாஜக பெற்று முதன்மை கட்சியாகவே உள்ளது.