தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை வழக்கில், நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சுவாதியை தான்தான் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ராம்குமார் இந்த கொலையை செய்யவில்லை என்றும், உண்மையான குற்றவாளியை மறைக்க போலீசார் முயல்கிறார் என்றும் வழக்கறிஞர் கிருஷணமூர்த்தி என்பவர் பரபரப்பு புகார்களை கூறினார். மேலும், ராம்குமாரின் ஜாமின் மனுவையும் அவர் தாக்கல் செய்தார்.
அதன்பின், ராம்குமாரின் ஜாமீன் மனு சம்பந்தப்பட்ட வழக்கிலிருந்து விலகுவதாக கிருஷ்ணமூர்த்தி இன்று திடீர் பல்டி அடித்தார். ராம்குமாரின் கைது பற்றி இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
“சுவாதி கொலைக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மகன் எந்த குற்றம் செய்யவில்லை. குற்றம் செய்திருந்தால் அவன் எங்கேயோ ஓடி ஒளிந்திருப்பான். இப்படி சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்திருக்க மாட்டான். மேலும் அவன் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை. போலீசார்தான் அவன் கழுத்தை அறுத்தனர்” என்று கூறியுள்ளார்.