இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியபோது, நான் இந்த மனுவை நேரடியாக தாக்கல் செய்யவில்லை. இந்த மனுவை தாக்கல் செய்தவர் மகேந்திரன், அவருக்கு பதிலாக நான் ஆஜராகி வாதிடினேன்.
மேலும், இந்த வழக்கில் பல சர்ச்சை கருத்துக்கள் வருகிறது. எங்களுக்கு ஏற்கனவே வேலைப்பளு அதிகமாக உள்ளது. இந்த வழக்கில் ஆஜராகி எங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. ராம்குமாரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தால், ஒருவேளை இதில் ஆஜராக வாய்ப்புள்ளது எனவும் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.