ராமேஸ்வரத்தில் இருந்து, புதன்கிழமை அன்று மீனவர்கள் பலர் குழுக்களாக, கடலுக்கு மீன் படிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு தீடீரென வந்த இலங்கை கடற்படையினர், ஒரு படகிலிருந்த 5 மீனவர்களை மட்டும் சிறைப் பிடித்தனர். பின்பு, அவர்களை தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்துச் செல்லப்பட்டனர்.