இவர், தனது கல்லூரிக்கு செல்வதற்காக பனைக்குளத்திலிருந்து அழகன்குளம் செல்லும் நகரப் பேருந்தில் பயணம் செய்து மொத்தம் ஆயிரம் சீட்டுகளை சேகரித்து வைத்துள்ளார். இதற்காக, இவருக்கு இந்திய சாதனைப் புத்தகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.
தனது சாதனை குறித்து அவர் கூறுகையில், ’பேருந்து நிலையங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த சாதனையை செய்துள்ளேன்’ என்றார்.