வருவாய்க்கு மீறி சொத்து சேர்த்த அதிகாரிக்கு சிறை: தப்பிப்பதற்கு அவர் என்ன ஜெயலலிதாவா? - ராமதாஸ் ட்வீட்

வியாழன், 21 மே 2015 (16:11 IST)
வருவாய்க்கு மீறி ரூ.7.27 லட்சம் சொத்து சேர்த்ததாக கூறிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு அதிகாரி தப்பிப்பதற்கு அவர் என்ன ஜெயலலிதாவா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நாள்தோறும் பல கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வருமாறு.
 
வருவாய்க்கு மீறி ரூ.7.27 லட்சம் சொத்து சேர்த்த அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை: தப்பிப்பதற்கு அவர் என்ன ஜெயலலிதாவா? என்று ட்வீட் செய்துள்ளார்.
 
மேலும் 10 ஆம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள், தோல்வியடைந்த மாணவர்கள் துணைத் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்