அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்கள் மத்தியில் மக்கள் நலக் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, இந்தக் கூட்டணியை வலுப்படுத்த முயற்சி செய்துவருகிறோம்.
மேலும், மரக்காணம் கலவரத்தில் தண்டனை பெற்ற 6 பேரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று ராமதாஸ் அவதூறு பரப்புகிறார். எனவே, அவர் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளோம் என்றார்.