140 ஆண்டுகளில் இதுவே முதல்முறை

புதன், 4 ஜனவரி 2017 (19:38 IST)
கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சென்ற ஆண்டு மழை மிகவும் குறைவாக பெய்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
2015ஆம் ஆண்டு தேவைக்கு அதிகமாக பெய்த மழை சென்ற ஆண்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவு கூட பெய்யவில்லை. கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சென்ற ஆண்டு மழை மிகவும் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ஆண்டு தோறும் வழக்கம்போல் பெய்யும் வடகிழக்குப் பருவமழை, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளை விட்டு விலகிவிட்டது. மேலும், வடகிழக்குப் பருவமழை வழக்கத்தைவிட இந்த ஆண்டு 62 சதவீதம் குறைவாக பெய்துள்ளது, என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்