தமிழகத்தில் 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

புதன், 25 நவம்பர் 2015 (00:30 IST)
தமிழகத்தில் 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், குமரிக் கடலில் மாலத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால்,  வரும் 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் மழை பெய்யலாம். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்