அடுத்த 3 மணிநேரத்தில் இடி மின்னலுடன் மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

Siva

வெள்ளி, 26 ஜூலை 2024 (07:47 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கன மழை வரையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்