சென்னையில், நேற்று இரவு 11 மணியளவில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், "வெப்பச் சலனம் நீடித்து வருவதால் இரவில் மழை பெய்து வருகிறது என்றும், இதனால், இன்று இரவும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.