கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தஞ்சாவூர், தூத்துக்குடி, அரியலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலை கழகம், மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.