மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.என்.எஸ்.பிரசாத் தலைமையிலான மத்திய ஆய்புக் குழு நேற்று சென்னையிலுள்ள தாம்பரம், முடிச்சூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டது.
நேற்று இந்த மத்திய குழுவை சந்தித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, "மத்திய குழு இந்த மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளால் ஏற்பட்ட சேதங்களை ஆழ்ந்து மதிப்பீட்டு மத்திய அரசாங்கம் எந்த வித தாமதம் இல்லாமல் மத்திய நிதியுதவி அளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார் என்பது குறிபிடத்தக்கது.