இதனால், வேளச்சேரி, மடிபாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மீண்டும் மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்குள் பாய்ந்து வீடுகளில் புகுந்துள்ளது.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆறு, கூவம் ஆறு ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.