மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: பொதுமக்கள் அவதி

செவ்வாய், 24 நவம்பர் 2015 (07:54 IST)
சென்னையில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மீண்டும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.


 

 
நேற்று மாலை சென்னையில் 16 சென்டி மீட்டர் அளவிற்கு கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகள் மீண்டும் வெள்ளம் தேங்கியுள்ளன.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் நேற்று இரவு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 
இதனால், வேளச்சேரி, மடிபாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மீண்டும் மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்குள் பாய்ந்து வீடுகளில் புகுந்துள்ளது.
 
இந்நிலையில், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆறு, கூவம் ஆறு ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்