தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பி.மேட்டுப்பாளையம் "அ" கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் தங்கராஜ், சென்னை, பட்டாளத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் ராஜி ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், மேல்விஷாரம் கிராமத்தைச் சேர்ந்த ஆஜிபாஷா மகன் சுவேல் அகமது; அபீப்பாஷா மகன் ரகுமான் பாஷா ஆகிய இருவரும் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.