தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வியாழன், 15 அக்டோபர் 2015 (07:50 IST)
வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது." என்று கூறினார். 
 
மேலும், "குமரிக்கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே இடத்திலும், மாலத்தீவு பகுதியிலும் இருக்கிறது. இதனால் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது." என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்