தொடர் மழை: சட்டக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

செவ்வாய், 24 நவம்பர் 2015 (04:17 IST)
தமிழகத்தில், தொடர்மழை காரணமாக சட்டக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழகத்தில், சென்னை மற்றும் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் கனமழை தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. போக்குவரத்து அடியோடு முடங்கியது. பொது மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் இன்று மற்றும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் தேர்வு தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்