இந்நிலையில் ரயில்வே துறையில் 'அன்னிய நேரடி முதலீடு, தனியார் மயம், புதிய பென்சன் திட்டம் போன்ற தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.
தொழிலாளர்களின் இந்த போராட்டத்துக்கு ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். எஸ்.ஆர்.இ.எஸ். பொதுச் செயலாளர் பி.எஸ்.சூரிய பிரகாசம், ஜானகிராமன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஞானசேகரன், ராமதாஸ், காளிமுத்தன், ஆர்.மோகன், பி.சேகர், பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.