இரட்டிப்பு மாற்ற கொரோனா இல்லை.. ஆனா பரவ காரணம் மக்கள்தான்! – சுகாதாரத்துறை செயலாளர் வருத்தம்!

வெள்ளி, 26 மார்ச் 2021 (10:41 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒருபுறம் தேர்தல் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு செயல்படுத்த வாய்ப்பில்லை. இதுவரை தமிழகத்தில் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் இரட்டிப்பு மாற்றமடைந்த கொரோனா பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. ஆனால் தற்போது கொரோனா அதிகரிக்க காரணம் மக்கள் மாஸ்க் அணிவதை தவிர்க்க தொடங்கியதால்தான்.. எனவே மக்கள் மாஸ்க் அணிவதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்