தமிழக சட்டப்பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளியேற்றம்
திங்கள், 23 பிப்ரவரி 2015 (16:30 IST)
தமிழக சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியேற்றப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அவையில் பேச கிருஷ்ணசாமி அனுமதி கோரினார். அதற்கு அவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார்.
இதனையடுத்து அவையின் மையப் பகுதிக்குச் சென்ற கிருஷ்ணசாமி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டார்.