பள்ளி மாணவிகளிடையே “கேங் வார்”? 4 நாட்கள் விடுமுறை! – புதுச்சேரியில் பரபரப்பு!

திங்கள், 19 செப்டம்பர் 2022 (15:52 IST)
புதுச்சேரியில் இரு வேறு பள்ளி மாணவிகளிடையே எழுந்த மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சுப்பிரமணிய பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வந்த நிலையில், அந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்திருந்த காரணத்தால் அப்பள்ளி மாணவிகள், அருகேயுள்ள குருசுகுப்பம் கிருஷ்ணராசலு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டனர்.

ஆனால் இரு பள்ளி மாணவிகளுக்கும் அடிக்கடி வாக்குவாதம் எழுந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பழைய பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், பழைய ஆசிரியர்களை மீண்டும் நியமிக்க வேண்டும் என்றும் சில நாட்கள் முன்னதாக மாணவிகள் போராட்டமும் நடத்தியுள்ளனர்.

ALSO READ: 16 வயது சிறுமி வன்கொடுமை; குற்றவாளிகளின் வீடுகள் இடித்து தகர்ப்பு!

இந்நிலையில் வழக்கம்போல இன்று பள்ளி செயல்பட்ட நிலையில் இரு பள்ளி மாணவிகளுக்கும் திடீரென மோதல் எழுந்துள்ளது. இதுகுறித்து அறிந்த பெற்றோரும் பள்ளியில் குவிந்ததால் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சம்பவ இடம் விரைந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி பாரதி மேல்நிலை பள்ளி மாணவிகளை அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் குருசுகுப்பம் மேல்நிலைப்பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்