மக்கள் நலக்கூட்டணி நிரந்தரமானது: வைகோ

வெள்ளி, 26 பிப்ரவரி 2016 (02:32 IST)
மக்கள் நலக்கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல. இது மக்களுக்கான என்பதால் இது நிரந்தரமான கூட்டணி ஆகும் என வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
 
மதிமுக பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில்  மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ கலந்து கொண்டார். அப்பாது அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவ மக்கள் நல கூட்டணி உருவாக்கப்பட்டது. எங்களது மக்கள் நல கூட்டணியில் புதிய கட்சிகள் அங்கம் வகிக்க உள்ளது. இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. மக்களுக்கான கூட்டணி என்பதால் எங்கள் கூட்டணி அப்படியே தொடரும் என்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்