தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு பொதுமக்களின் ஒட்டுமொத்த ஆதரவும், சசிகலாவுக்கு பயங்கரமான எதிர்ப்பும் நிலவி வருகிறது. சசிகலா முதல்வராவதை பெரும்பாலான பொதுமக்கள் விரும்பவில்லை. தேர்தலை சந்தித்து வெற்றி பெறாமல் குறுக்கு வழியில் முதல்வராக துடிக்கிறார் சசிகலா என பொதுமக்கள் பரவலாக பேசுகின்றனர்.
பொதுமக்கள் ஒரே அணியில் திரண்டு சசிகலாவை எதிர்ப்பதை சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பார்க்க முடிகிறது. வக்களித்து தேர்ந்துடுத்து அனுப்பிய எம்எல்ஏக்களுக்கு மக்கள் குரல் கேட்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.