வருடம் தோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்திய முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவதும், நாய்களுக்கும், கழுதைகளுக்கும் திருமணம் செய்து வைத்து காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இதேபோல், இந்த வருடமும் இந்து முன்னனி சார்பில் திருப்பூரில் நாய்களுக்கு அலங்காரங்கள் செய்து வந்து திருமணம் செய்து வைக்கப்பட்டது.
மேலும், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இந்து முன்னனி சார்பில் வாழ்த்து அட்டைகளை செருப்பால் அடித்தும், கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்து முண்ணனி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.