மது கடையை மூடக்கோரி கோவிலம்பாக்கத்தில் போராட்டம்: காவல்துறையினர் தடியடி

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (10:37 IST)
சென்னை கோவிலம்பாக்கத்தில் அரசு மதுபானக்கடையை மூட வலியுறுத்தி மதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர் அப்போது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
 
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி இன்று மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
அதன்படி, சென்னை கோவிலம்பாக்கத்தில் அரசு மதுபானக்கடையை மூட வலியுறுத்தி மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலர் போராட்டம் நடத்தினர்.
 
அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தினர்.
 
பின்னர், போராட்டம்  நடத்தியவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்