தமிழகத்தில் மதுவிலக்கு அறிவிப்பை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் தமிழக அரசு அறிவிக்காவிட்டால், பாஜக சார்பில், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், மது விலக்கை கொண்டு வருவது குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனே கூட்ட வேண்டும். மாற்று வருமானம் குறித்து தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்க வேண்டும். வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் மதுவிலக்கு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். இல்லை எனில் தமிழகம் முழுவதும் பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.