மதுவிலக்கு கோரி சென்னை டூ குமரிக்கு நடைபயணம்: குமரிஅனந்தன்

திங்கள், 23 நவம்பர் 2015 (05:51 IST)
மதுவிலக்கை வலியுறுத்தி டிசம்பர் 10 ஆம் தேதி அன்று, சென்னை முதல் கன்னியாகுமரிக்கு நடைபயணம் செல்ல உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, சென்னையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுவிலக்கை வலியுறுத்தி ராஜாஜி பிறந்த டிசம்பர் 10ஆம் சென்னை பாரிமுனையில் உள்ள அவரது உருவச்சிலையின் முன்பு இருந்து கன்னியாகுமரிக்கு நடைபயணம் செல்ல உள்ளேன். ஜனவரி 30 ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபயணம் நிறைவடைகிறது. செல்லும் வழியில் எல்லாம்  மதுவின் தீமை குறித்து மக்களுக்கு விளக்கப்படும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்