வேன், ஆத்தூர் - பெரம்பலூர் சாலையில், வால்கரடு பஸ் நிலையம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த 15 ஆசிரியைகள், 3 டிரைவர்கள் உள்ளிட்ட 18 பேரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.