தர்மபுரி பாரதி புரத்தையொட்டி சேலம் – பெங்களூர் ரெயில்வே பாதை உள்ளது. இப்பகுதியில் 500க்கும் குடியிருப்புகள் உள்ளன. இந்த ரெயில்வே பாதையை ஒட்டி மின் விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அந்த பகுதியில் அடிக்கடி சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து பொதுமக்கள் பள்ளி மாணவியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் என்பதும், தனியார் பள்ளியில் படித்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் பொதுமக்கள் மாணவிக்கு அறிவுரை கூறி அவளது வீட்டிற்கு அழைத்து சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.